Wednesday, May 16, 2018

நானே அடுத்த முதல்வர்: எடியூரப்பா - குமாரசாமியே அடுத்த முதல்வர்: சித்தராமையா

Added : மே 16, 2018 02:30 | 




 
பெங்களூரு: சட்டசபை கட்சி தலைவராக இன்று நான் தேர்வாகிறேன் என பா.ஜ. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறினார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பா.ஜ. 104 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் 7 நாள் கெடு விதித்துள்ளார்.இது குறித்து எடியூரப்பா கூறியது, இன்று பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்நடக்கிறது. இதில் நான் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளேன். பின்னர் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்துவேன். இனி கவர்னரின் முடிவுபடியே செயல்படுவோம். நிச்சயம் முதல்வராக பொறுப்பு ஏற்பேன் என்றார்.

குமாரசாமியே முதல்வர் : சித்தராமையா

இதற்கிடையே மத சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு அளித்து குமாரசாமியை முதல்வராக்க தயார் என காங். அறிவித்தது. நேற்றுநடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங். 78 இடங்களில் வெற்றிபெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியது, மதசார்பாற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்துவோம். முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்பார். எங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்றார்..

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...