Monday, May 14, 2018

அதிரடி ஆஃபரால் குவிந்த கூட்டம்; தடியடி மூலம் விரட்டிய போலீஸார்..!

நவீன் இளங்கோவன் ரமேஷ் கந்தசாமி  vikatan 13.05.2018

Erode:

ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடை ஒன்று வெளியிட்ட அதிரடி தள்ளுபடியால், ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

ஈரோடு பிரப் சாலையில், பெரிய மாரியம்மன் கோவில் எதிரில் ஆண்களுக்கான ஒரு பிரத்தியேக புதிய துணிக்கடை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக டி-சர்ட் 30 ரூபாய்க்கும், சர்ட் 99 ரூபாய்க்கும் பேன்ட் 149 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்தனர். இந்தச் சிறப்பு ஆஃபர் குறித்து ஈரோடு நகர் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள், லோக்கல் சேனல்களில் விளம்பரங்கள் மற்றும் செய்தித்தாள்களில் கால்பக்க விளம்பரங்கள் எனத் துணிக்கடை நிர்வாகம் பயங்கரமாக விளம்பரம் செய்திருந்தனர். அதனையடுத்து, இன்று காலை முதலே கடையின் முன்பு கூட்டம் குவியத் தொடங்கியது. நேரம் ஆக ஆக பிரப் சாலையில் வாகனங்கள் கடக்க முடியாத அளவிற்கு, அந்தத் துணிக்கடையின் முன்பு கூட்டம் களைக்கட்டியது.



மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், துணிக்கடை நிர்வாகத்தினர் அவர்களுடைய ஆட்களைக் கடையின் முன்பு நிறுத்தி வைத்து பத்து பத்து ஆட்களாகக் கடையினுள் அனுப்பி வைக்கும் திட்டத்தை கையிலெடுத்தனர். ஆனால், ’உள்ள விடுங்கய்யா...’ என மக்கள் முண்டியடித்து கடையினுள் நுழைய முயற்சிக்க, துணிக்கடை நிர்வாகத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் கடையினுடைய ஷட்டரை இழுத்துப் பூட்டினர். இந்தத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸார்கள், கடையின் முன்பு கூடியிருந்த கூட்டத்தை நோக்கி லத்தியைச் சுழற்ற ஆரம்பித்தனர். போலீஸாரின் தடியடிக்குப் பயந்த பொதுமக்கள் மற்றும் இளசுகள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.



இருந்தும் கடையை இன்னும் கொஞ்ச நேரத்தில் திறந்துவிடுவார்கள் என ஒரு கூட்டம் அந்தக் கடையைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனைப் பார்த்த போலீஸார், ஒரு பெரிய பூட்டை எடுத்து கடையைப் பூட்டி அதற்கு முன் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்தார்கள். அதன்பிறகு தான் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

ஒரு துணிக்கடையை பாதுகாக்க இத்தனை போலீஸா என சாலையைக் கடந்தவர்கள், நக்கலாக சிரித்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...