Friday, May 4, 2018

முதுநிலை மருத்துவ படிப்புக்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Added : மே 04, 2018 07:18

சென்னை:திருத்தப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு, 10 ஆயிரத்து, 797 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 26ல்,முடிவடைந்தது.அப்போது, 9,848 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பான, பிரச்னையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை குறைத்து, மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணில், பொது பிரிவினருக்கு, 149ல் இருந்து, 233; ஆதிதிராவிடருக்கு, 115ல் இருந்து, 218; மாற்றுத்திறனாளிகளுக்கு, 133ல் இருந்து, 2018 வரையும், 'கட் ஆப்' மதிப்பெண்ணை, தமிழக மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்தது.

திருத்தப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், தகுதியுடையோர், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, மே, 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, 949 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதனால், விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 797 ஆகியுள்ளது. விரைவில், தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...