Friday, May 4, 2018

சேலத்தில் பரவும் மர்மக்காய்ச்சல் மீண்டும் தலை தூக்குது டெங்கு

Added : மே 04, 2018 04:58

சேலம் மாவட்டம், சங்க கிரி, இடைப்பாடி பகுதியில், மர்ம காய்ச்சல் பரவி வருவதால், மீண்டும், 'டெங்கு' அச்சம் உருவாகிஉள்ளது. 'சுகாதாரத் துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஆண்டு, டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியது; 63 பேர் உயிரிழந்தனர். அதிலும், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.தற்போது, சேலம் மாவட்டம், சங்ககிரி, இடைப்பாடி பகுதியில், மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

எனவே, காலம் கடந்த பின், தடுப்பு நடவடிக்கை எடுக்காமல், முன்னெச்சரிக்கையாக, துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.சேலம் சுகாதாரத் துறை துணை இயக்குனர், பூங்கொடி கூறியதாவது:கடந்த ஆண்டு, ஒன்றியத்துக்கு, 100 பேர் வீதம், டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காய்ச்சலின் தாக்கம் குறைந்த பின், ஆட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஜனவரிக்கு பின், ஒரு பாதிப்பும் இல்லாத நிலையிலும், ஒன்றியத்துக்கு, 10 பேர் வீதம், தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மாநகராட்சியிலும், இதே நிலை தான் நீடிக்கிறது. சேலம் மாவட்டத்தில், இதுவரை டெங்கு பாதிப்பு கண்டறியப்படவில்லை. சங்ககிரி பகுதியில் இருப்பது சாதாரண காய்ச்சல் தான். தொடர்ந்து, டெங்கு குறித்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இரு நாட்களுக்கு முன், கடும் காய்ச்சலால், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, 'டெங்கு' உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் மூடி மறைக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...