Monday, May 14, 2018

முதுநிலை மருத்துவம்: 117 இடங்கள் தமிழகத்துக்கு ஒப்படைப்பு

By DIN  |   Published on : 12th May 2018 02:14 AM  | 
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத 117 இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ் ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கும், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்குமான அகில இந்தியக் கலந்தாய்வு மார்ச் 27-இம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
இறுதிக்கட்டக் கலந்தாய்வு மே 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழக ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1,646 முதுநிலை இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள், அதாவது 823 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. கலந்தாய்வு முடிவில் 117 இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த ஆண்டு 335 இடங்கள் தமிழகத்துக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வு தாமதம்: முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்குச் சலுகை மதிப்பெண் வழங்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இந்த வழக்குகள் காரணமாக மார்ச் மாதம் தொடங்க வேண்டிய தமிழக இடங்களுக்கான முதுநிலை கலந்தாய்வு இதுவரை தொடங்கவில்லை. 
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய மற்றும் மாநிலங்களின் கலந்தாய்வு மே 30-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.
இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் இடங்களை வழங்கும் நோக்கில் சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...