Monday, May 14, 2018

ஏழுமலையான் தரிசனம் : 25 மணி நேரம் காத்திருப்பு

Added : மே 14, 2018 02:30

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் நேற்று, 25 மணி நேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையை தொடர்ந்து, ஆந்திராவில், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து, ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 25 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் வருகைக்கு தக்கபடி, தேவஸ்தானம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான, பவன் கல்யாண், நேற்று முன்தினம் இரவு, பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, சாதாரண பக்தர்களை போல், வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக சென்று, 300 ரூபாய் விரைவு தரிசனத்தில், ஏழுமலையானை தரிசித்தார்.சுவாமி தரிசனம் செய்த பின், பவன் கல்யாண் கூறுகையில், ''மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையை அருள வேண்டும் என, வேண்டிக் கொண்டேன். கோவிலையும், அதன் சுற்றுப்புறங்களையும் துாய்மையாக வைத்துக் கொள்வது அனைவரின் கடமை. திருமலையில் அரசியல் பேச விரும்பவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...