Monday, May 14, 2018

மாசில்லா ராஜபாளையம் தேனீ வளர்ப்பிற்கு உதவும் விவசாயி

Added : மே 14, 2018 02:27

ரசாயன உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் மாற்றுமுறை விவசாயத்தில் விளைநிலங்களில் ஊடுபயிரிடுதல், அகத்தி மரம் வளர்த்தல் போன்றவற்றுடன் தற்போது தேனீ வளர்ப்பும் சேர்ந்து உள்ளது. இதன் மூலம் வருமானம் கிடைப்பதால், விவசாயிகளிடையே ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.பூக்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் தான் காய், கனி என விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். இந்த சேர்க்கைக்கு துணையாக இருக்கும் தேனீக்களை பெட்டிகள் மூலம் தோட்டத்தில் வளர்க்கின்றனர். இதன் மூலம் விளைபொருள் உற்பத்தி அதிகமாகும். தேன் கிடைக்கும். தோட்டத்தில் தேனீ வளர்ப்பு பெட்டி வைக்க ராஜபாளையம் வேலாயுதராஜா, பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உதவுகிறார்.வேலாயுதராஜா கூறுகையில், ''ஆர்வமுள்ள விவசாயிகளின் தோப்புகளில் தேனீ வளர்ப்பு பெட்டி அமைத்து தேன் சேகரித்து வருகிறேன். இதன் மூலம் விவசாயிகளுக்குவிளைச்சல் அதிகரிப்பதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடும் குறைகிறது.அயல்மகரந்த சேர்க்கையை அதிகரித்து காய்ப்புத்தன்மையை பெருக்கும் இம்முறையின் பலன்கள் தெரிந்ததும், பலர் தேனீ வளர்ப்பு பெட்டி அமைக்கின்றனர்'' என்றார். இவரிடம் 91595 22114 என்ற அலைபேசி எண்ணில் ஆலோசனை பெறலாம்.ரமேஷ், இயற்கை விவசாயி, ராஜபாளையம்: நிலத்தை பண்படுத்தும்முறை முதல் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் ரசாயன உரங்கள் வரை, மண்ணின் தன்மையை மாற்றி விடுகின்றன. இது வரும் தலைமுறைக்கு உடலளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதிகவிளைச்சலுக்காக விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக குறைந்த செலவில் தேனீ வளர்ப்பு முறையை தொடர வேண்டும்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...