Thursday, May 3, 2018

'கல்லூரியின் பெயரை மாற்ற அனுமதியில்லை'

Added : மே 03, 2018 04:14


புதுடில்லி:தயாள் சிங் கல்லுாரியின் பெயர் மாற்றத்தை அனுமதிக்க, மத்திய அரசு மறுத்துள்ளது.டில்லி பல்கலையின் கீழ், தயாள் சிங் கல்லுாரி என்ற பெயரில், காலை மற்றும் மாலை நேரகல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாலை நேர தயாள் சிங் கல்லுாரியின் பெயரை, 'வந்தே மாதரம் தயாள் சிங் கல்லுாரி' என, கல்லுாரி நிர்வாகம் மாற்றியது; இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான,பிரகாஷ் ஜாவடேகர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கல்லுாரியின் பெயர் மாற்றத்தை அனுமதிக்க முடியாது. இரண்டு கல்லுாரிகளையும் வேறுபடுத்திக் காட்ட, 'ஏ' அல்லது 'பி' எனக் குறிப்பிடலாம். பார்லிமென்டில் அனுமதி பெறாமல், கல்லுாரி பெயரை மாற்றிய கல்லுாரி நிர்வாகம் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...