Monday, May 14, 2018

கொடைக்கானலில் கூட்டம் : சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

Added : மே 14, 2018 02:51

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணியர் அதிகளவில் குவிந்ததால், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோடை விடுமுறையை தொடர்ந்து, கொடைக்கானலில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஸ்தம்பித்தது. சுற்றுலா இடங்களுக்கு செல்லும் அப்சர்வேட்டரி ரோட்டில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல இடங்களை பார்க்க முடியாமல், பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.'கூட்டத்தை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசாருடன், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...