Monday, May 14, 2018

13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்: பெற்ற தாயே நடத்தி வைத்த அவலம்

Published : 13 May 2018 12:41 IST



படம்: சிறப்பு ஏற்பாடு

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கு நடந்த ரகசிய திருமணம் புகைப்பட்டத்தால் அம்பலமானது. இது குறித்து தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருக்கிறார். தனக்குப் பின் தனது மகனை யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். சொந்த பந்தகள் வாயிலாக 23 வயது பெண் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

தாயின் முழு சம்மதத்தோடு திருமணமும் நடந்துள்ளது. திருமண நிகழ்வில் உறவினர்களில் யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக போலீஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீஸ் விசாரணை குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், பெண் வீட்டாரும் தலைமறைவாகிவிட்டனர். போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில் துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...