Wednesday, May 23, 2018

வருமான வரி: ஓய்வூதியர்கள் எதிர்ப்பு

Added : மே 23, 2018 00:22

மதுரை: அரசு துறைகளில், 35 ஆண்டுகள் வரை பணி செய்து, பணி நிறைவு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 'இத்தொகை தர்மமோ, தானமோ, அல்ல' என ஓய்வூதிய விதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வருமான வரியை, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்வதற்கு, ஓய்வூதியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது:நல நிதி, குடும்ப பாதுகாப்பு நிதி தவிர, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய அலுவலர்களுக்கு உரிமையில்லை. ஓய்வூதியத்தில், வருமான வரியை, கருவூல அலுவலர் பிடித்தம் செய்வது, வரம்பு மீறிய செயல். தொழில் மூலம் ஈட்டும் வருவாய்க்கும், முதுமை அடைந்ததற்கு வழங்கும் நிதிக்கும் வேறுபாடு உள்ளது. எனவே வருமான வரி பிடித்தம் கூடாது.இவ்வாறு அவர்

கூறினார்.

No comments:

Post a Comment

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...