Thursday, May 24, 2018

மொபைல் போன் எண் பெறுதல்: பொறியாளர்களுக்கு எச்சரிக்கை

Added : மே 24, 2018 00:22

மின் நுகர்வோரிடம் இருந்து, மொபைல் போன் எண்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்துமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் எச்சரித்துள்ளது.மின் கட்டணம் எவ்வளவு, செலுத்த வேண்டிய கடைசி தேதி என்ன, மின் தடை தேதி ஆகிய விபரங்களை, மின் நுகர்வோரின், மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின் வாரியம் தெரிவிக்கிறது.மின் கட்டணம் செலுத்த தகுதி உடைய, 2.50 கோடி பேரில், ஒரு கோடி பேர், மொபைல் எண்களை, பிரிவு அலுவலகங்களில் வழங்கவில்லை.இதுகுறித்து, நமது நாளிதழிலும், சமீபத்தில், விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, மொபைல் எண் தராதவர்களில், அவற்றை வாங்கும் பணியை, மின் வாரியம் துரிதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும், சராசரியாக, 2,000க்கும் மேற்பட்ட நுகர்வோர், மொபைல் போன் எண்களை தராமல் உள்ளனர்.இதனால் அவர்கள், மின் வாரியத்தின், எம்.எம்.எஸ்., சேவையை பெற முடியவில்லை.மொபைல் எண் தராதவர்களிடம், அதை வாங்கி, அந்த விபரத்தை, இம்மாத இறுதிக்குள் தெரிவிக்கும்படி, பிரிவு அலுவலக பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணியில், அலட்சியம் காட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

No biryani, wedding turns bloody

No biryani, wedding turns bloody  Knives Out After Wedding Guests Bicker Over Being Served Pulao  TIMES NEWS NETWORK  Ahamedabad 14.05.2026 ...