Sunday, December 1, 2019

ஆதார் இருந்தால் வெங்காயம் ; உ.பியில் கூத்து

Updated : டிச 01, 2019 00:58 | Added : டிச 01, 2019 00:55

வாரணாசி : உத்திரபிரதேசத்தில் ஆதார் அட்டையை அடமானமாக வைத்து வெங்காயம் வாங்கலாம் என சில கடை உரிமையாளர்கள் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.



தற்போது நாட்டில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100க்கு அதிகமாகவே விற்கப்படுகிறது. வெங்காயத்தின் கடுமையான விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளும் பலவித முயற்சிகளையும் செயல்பாடுகளையும் செய்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பல இடங்களில் இருந்தும் வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே வெங்காய விலை உயர்வு மக்களை வெகுவாகவே பாதித்துள்ளது.





இந்நிலையில் உ.பி மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சில காய்கறி உரிமையாளர்கள் வெங்காய உற்பத்தி குறித்து புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். அதாவது, வெங்காயம் வங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் கார்டை அடமானமாக வைத்து வெங்காயம் வாங்கி செல்லலாம். மற்றும் சில கடைகளில் வெள்ளி பொருட்களை அடமானமாக வைத்தாலும் வெங்காயம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.



இதுகுறித்து ஒரு வெங்காய கடை உரிமையாளர் கூறுகையில், நாட்டில் வெங்காயத்தின் மதிப்பும் அதன் தேவையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. உ.பியில் கடை உரிமையாளர்கள், பணம் வைக்கும் பெட்டிகளில் தற்போது வெங்காயத்தை பாதுகாப்பாக வைத்கின்றனர். பல இடங்களில் வெங்காயம் கொள்ளையடிக்கப்படுவதாகவம் கூறப்படுகிறது. இதன் மூலமாக மாநிலத்தில் நிலவிவரும் வெங்காய விலை உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...