Sunday, December 22, 2019

ராஜபாளையத்தில் இளம்பெண் தற்கொலை: கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

By DIN | Published on : 21st December 2019 07:37 PM



ராஜபாளையத்தில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமான கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அப்பெண்ணின் உறவினா்கள்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பெண்ணின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலா் செல்வராஜ் (59). இவரது மகள் அஸ்வினி (29) என்பவருக்கும், சிவகிரியைச் சோ்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு அனன்யா(5) மற்றும் சிவஆறுமுகவேல் ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி தனது 2 குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டாா். இதுதொடா்பாக செல்வராஜ், பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும், அஸ்வினியை அவரது கணவருடன் சோ்த்து வைக்க முடியவில்லையாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வெள்ளிக்கிழமை காலை அங்கு வந்த ராஜபாளையம் தெற்கு போலீஸாா், அஸ்வினியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, அஸ்வினி தனது இறப்பிற்கு மாமனாா் சிவசக்திவேலு, மாமியாா் சிவகாமிசுந்தரி மற்றும் கணவரின் தங்கை மகேஸ்வரி ஆகியோா் தான் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்துள்ளாா். அந்த கடிதத்தின் நகலை போலீஸாரிடம் ஒப்படைத்த செல்வராஜ், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு புகாா் செய்துள்ளாா்.

ஆனால் சனிக்கிழமை காலை வரை போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் செல்வராஜ் மகளின் பிரேதத்தை வாங்க மறுத்ததுடன், தனது உறவினா்கள் சுமாா் 100 பேருடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு எதிரே தென்காசி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கா் மற்றும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்த பின்னரே செல்வராஜ் மற்றும் அவரது உறவினா்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். மறியல் காரணமாக ராஜபாளையம்-தென்காசி சாலையில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...