Sunday, December 22, 2019


கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்

By DIN | Published on : 22nd December 2019 03:05 AM

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

எழும்பூர்-திருச்சி: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06025) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு திருச்சிராபள்ளியை சென்றடையும்.
திருச்சி-சென்னை: திருச்சிராப்பள்ளியில் இருந்து டிசம்பர் 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06026) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை-எர்ணாகுளம்: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82631) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்
இதுதவிர, சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...