Sunday, December 1, 2019

'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...' பாடலை நினைவு படுத்திய எஸ்.ஐ.,

Added : நவ 30, 2019 23:56

லக்னோ:கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, பெண் எஸ்.ஐ., ஒருவரை காதலிப்பது போல் நாடகமாட வைத்து, அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பால்கிஷண் சவுபே. இவர், மத்திய பிரதேச மாநிலத்தில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும், போலீசார், இவரை கைது செய்ய முயற்சித்தபோதும், சாமர்த்தியமாக தப்பி விடுவார். இவரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, ம.பி., போலீசார் அறிவித்திருந்தனர். ஒப்படைப்புஇந்நிலையில், சவுபேயை கைது செய்ய, போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். பெண் எஸ்.ஐ., மாதவி, 28, என்பவரிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த எஸ்.ஐ., சவுபேயிடம், ஒரு முறை போனில் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் சவுபே பேசியதும், 'தவறாக உங்களிடம் பேசி விட்டேன்; ராங் நம்பர்' என கூறி, இணைப்பை துண்டித்தார். இதேபோல் மீண்டும் ஒருமுறை செய்தார். அடுத்ததாக, அவர் எதிர்பார்த்தது நடந்தது. சவுபே, அடிக்கடி, மாதவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஒரு கட்டத்தில், காதலிப்பதாக, எஸ்.ஐ.,யிடம் கூறினார். இருவருக்கும் இடையே, போன் மூலமாக நாடக காதல் தொடர்ந்தது. சில நாட்களுக்குப் பின், அந்த எஸ்.ஐ., 'நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். உ.பி., மாநிலம், பிஜோரியில் உள்ள கோவிலில் திருமணம் முடிக்கலாம்; நாளை காலை, அங்கு வந்து விடுங்கள்' என்றார். அதிரடி கைதுஇதை நம்பிய சவுபே, குறிப்பிட்ட நாளில், மாப்பிள்ளை கோலத்தில் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு காத்திருந்த போலீசார், சவுபேயை அதிரடியாக கைது செய்தனர். சவுபேயை காதலிப்பது போல் நாடகமாடி, அவர் கைது செய்யப்படுவதற்கு மிகவும் உதவிய மாதவிக்கு பாராட்டு குவிகிறது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...