Wednesday, May 2, 2018

இனி, 'பறந்துகிட்டே' பேசலாம் : 'டிராய்' அமைப்பு பரிந்துரை

Added : மே 01, 2018 23:57

புதுடில்லி; 'டிராய்' எனப்படும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாடு ஆணையம், விமானத்தில் பறந்தபடி, இன்டர்நெட் பயன்படுத்தவும், போனில் பேசவும் அனுமதிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.தொலைதொடர்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய வான்வெளியில், விமானங்களில் பயணம் செய்வோர், விமானம், 3,000 மீட்டர் உயரத்தை எட்டியபின், இன்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம் என்றும், மொபைல் போனில் பேசலாம் என்றும், டிராய் பரிந்துரைத்துள்ளது.இந்த பரிந்துரைகளுக்கு, தொலைதொடர்பு கமிஷன், நேற்று ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, விமான பயணத்தின்போது, இன்டர்நெட், போன் சேவை பயன்படுத்த அனுமதிக்கும் திட்டம், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில், அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமானம் புறப்பட்டு, ஐந்து நிமிடங்களில், 3,000 மீட்டர் உயரத்தை எட்டும். எனவே, விமான பயணியர், விமானம் புறப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு பின், இன்டர்நெட், போன் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் எனத் தெரிகிறது. இதற்கு தேவையான சட்ட திருத்தங்களை இயற்ற, தொலைதொடர்புத் துறை நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra Published On 4 Apr...