Wednesday, May 16, 2018

அரசு மருத்துவமனையில் சேவைக்கு லஞ்சம் : மருத்துவ கல்வி இயக்குனருக்கு, 'நோட்டீஸ்'

Added : மே 16, 2018 00:19

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், அனைத்து சேவைக்கும் லஞ்சம் வாங்கப்படுவது குறித்து பதிலளிக்க, மருத்துவ கல்வி இயக்குனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழக மக்கள் நுகர்வோர் பேரவை தாக்கல் செய்த மனு: சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற வரும் ஏழை மக்களிடம், அங்கு பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள், ஒவ்வொரு சேவைக்கும் லஞ்சம் வாங்குகின்றனர். ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனைகள், பணம் கொடுத்தால் தான் எடுக்கப்படுகிறது.வீல் சேர் தள்ளுவோர், சவரம் செய்யும் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர் ஆகியோருக்கு, பணம் கொடுத்தால் தான், தங்கள் சேவையை செய்கின்றனர்.இவற்றை தடுக்க, மருத்துவமனையிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், கண்காணிப்புக்குழு அமைக்கப்படவில்லை.லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது, உயரதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏழை மக்களுக்கு, இலவசமாக மருந்து, மாத்திரை வழங்குவது, தமிழக அரசின் கடமை. இதில் தவறிய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய தலைவர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், 'அரசு மருத்துவமனையில், இலவச சேவைக்கு பணம் வாங்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை.
'இதுபோன்ற புகார்களில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...