Tuesday, May 22, 2018

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி

Added : மே 22, 2018 06:38 |



  சிம்லா : சிம்லாவில் நடந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என பல்கலை அறிவிக்க, அதனை ஏற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் 6 நாள் பயணமாக, இமாச்சல் தலைநகர் சிம்லாவுக்கு சென்றுள்ளனர். பயணத்தின் ஒரு பகுதியாக நவ்னியிலுள்ள டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலையில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு, பல்கலை அறிவியல் துறையில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது. இதனை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார்.

பின் தனது உரையின் போது ஜனாதிபதி குறிப்பிடுகையில், 'இத்துறை சார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இப்பட்டத்தை பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 07.12.2025