Tuesday, July 10, 2018

சபரிமலை நடை 16ல் திறப்பு

Added : ஜூலை 10, 2018 01:31

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில், வரும், 16-ல் நடை திறக்கப்படுகிறது.கேரள மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 16-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு, திருநீறு பிரசாதம் வழங்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.வரும், 21- வரை, எல்லா நாட்களிலும் உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, களப பூஜை, சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024