Monday, July 9, 2018

50 வயது ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்

Added : ஜூலை 09, 2018 01:46

லக்னோ பணியை சரியாகச் செய்யாத, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு, கட்டாய பணி ஓய்வு வழங்க, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது; இதற்கு, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 16 லட்சம் பேர், மாநில அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்; இவர்களில், 50 வயதை கடந்தவர்களுக்கு, தகுதி அடிப்படையில் கட்டாய பணி ஓய்வு வழங்கும் திட்டத்தை, மாநில அரசுஅறிவித்துள்ளது. இதன்படி, 50 வயதை கடந்த அரசு ஊழியர்களுக்கு, துறை வாரியாக, கட்டாய தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன; இந்த தேர்வுகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடத்துகின்றனர்; இதில், ஊழியரின் திறன், நேர்மை, பணி செய்வதில் காட்டும் ஆர்வம் ஆகியவை கணக்கில் எடுக்கப்படும்.பணியை தொடர, தகுதியற்றவராக கருதப்படுபவர்களுக்கு, ஜூலை, 31ல், கட்டாய பணி ஓய்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது தொடர்பாக, உ.பி., தலைமை செயலக ஊழியர்கள் சங்க கூட்டம், இன்று நடக்கிறது; இதில், ஊழியர்களின் அடுத்தகட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024