Sunday, July 15, 2018

ஆடி அமாவாசை அன்று கொடுமுடியில் பித்ரு தர்ப்பணம்

Added : ஜூலை 15, 2018 04:55 |


சேலம்:தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டுக்கு சிறந்தது. அதனால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.

காலைக்கதிர் 'ஆன்மிகக்கதிர்' வார இதழ் வாசகர்களுக்காக ஆடி அமாவாசை அன்று 'சமஷ்டி தர்ப்பணம்' நிகழ்ச்சியை நடத்துகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி, ஏமகண்டனுார் காவிரி கரையில் ஆடி அமாவாசையான ஆக., 11ல், வேத விற்பனர்களால் 'சமஷ்டி தர்ப்பணம்' நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கணபதி பூஜை, அமாவாசை சங்கல்பம், வருண கலச பூஜை, நவகிரக பூஜை, பித்ரு பூஜை, பித்ரு பிண்ட பூஜை, தர்ப்பணம், தீபாராதனை, சூரிய நமஸ்காரம், பித்ரு பிரசாத ஆசீர்வாதம், கோ பூஜை (பித்ருக்களுக்கான சமஷ்டி ஹோமம்) நடக்கிறது. பங்கேற்க கட்டணம் உண்டு. காலை 6:30 - 7:00; 7:15 - 7:45; 8:00 - 8:30; 8:45 - 9:15; 9:30 - 10:00 மணி வரை என ஐந்து பிரிவாக நடக்கும்.

ஆடி அமாவாசையில் முன்னோர் ஆசி பெற்று எல்லா வளங்களையும் பெற, வரும் 25ம் தேதிக்குள் 95976 66400 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024