Thursday, July 19, 2018


நாளை முதல் லாரி ஸ்டிரைக் உணவு பொருள் தட்டுப்பாடு அபாயம்

Added : ஜூலை 18, 2018 23:06






மதுரை, ''டீசல் விலை நிர்ணயத்தை மாற்றக்கோரி நாளை (ஜூலை 20) முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும்,'' என, லாரி உரிமையாளர்கள் சங்க மதுரை மாவட்ட தலைவர் சி.சாத்தையா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். வாட் வரியை ஜி.எஸ்.டி.,யுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஜூலை 20 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். மதுரையில் 4,500 லாரிகள் பங்கேற்கின்றன. 230க்கும் மேற்பட்ட தினசரி லாரி புக்கிங் ஆபீஸ்களும் மூடப்படும். நேஷனல் பெர்மிட் பெற்ற 400 லாரிகள் ஓடாது.ஸ்டிரைக்கால் நாள் ஒன்றுக்கு மதுரையில் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் பாதிக்கும். லாரி தொழிலை நம்பியுள்ள ஒருலட்சம் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி,பழங்கள், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மத்திய, மாநில அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024