Saturday, July 14, 2018


ஏசி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

By DIN | Published on : 13th July 2018 08:48 PM


சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து கரூா், போடி ஆகிய பகுதிகளுக்கு படுக்கையுடன் கூடிய குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக அதிநவீன வசதிகளைக் கொண்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அண்மையில் தொடங்கி இயக்கி வருகிறது. 250-க்கும் மேற்பட்ட இப்புதிய பேருந்துகளில் பல வசதிகள் இருந்தாலும், குறிப்பிடும்படி படுக்கையுடன் கூடிய குளிா்சாதன வசதிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் தேவையறிந்து தனியாா் நிறுவனங்களால் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக சென்னை எழும்பூரிலிருந்து படுக்கை வசதியுடன் கூடிய குளிா்சாதனப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. புதிதாக இயக்கப்பட்ட அதிநவீனப் பேருந்துகளில் 40 பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேருந்துகள் வரப்பெற்று, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா், பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024