Thursday, November 6, 2014

அந்தக் காலத்து படம் மாதிரி இல்லபா



பொங்கல்னா ஜல்லிக்கட்டு. தீபாவளின்னா சினிமா டிக்கெட்டு’அப்படினு ஊர்ல பெரியவங்க சொல்லுவாங்கோ. ‘அதான் தீபாவளி முடிஞ்சு போச்சுல அதுக்கு இப்ப இன்னா?’ அப்படிங்கிறீங்களா? தீபாவளிதான் முடிஞ்சுபோச்சே. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் இன்னும் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு. கூல் ட்யூட், ஓகே… ஓகே… ஐ வில் கம் டூ த பாயிண்ட்...

இன்னைக்கு தீபாவளின்னா புது ட்ரெஸ், பார்ட்டி, பீச், அப்படி இப்படினு ப்ரெண்ட்ஸோட பயங்கரமா செலிபிரேட் பண்ணியிருப்பீங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி இன்னாதான் இருந்தாலும் சினிமாதான் ஸ்பெஷல். இப்ப எல்லாம் முன்னாடியே ரிசர்வ் பண்ணி, போட்டிருக்க சட்டைல சின்ன மடிப்புக்கூட கசங்காம படம் பார்த்துறோம்.

ஆனா முன்னாடி அப்படி இல்ல. அதுலயும் ரஜினி, கமல் படம் ரிலீஸ் ஆச்சுன்னா போதும். சும்மா ஏரியாவே பட்டையைக் கிளப்பும். காலைல சன் எல்லாம் வர்றதுக்குள்ளே ப்ரெஷ், பேஸ்ட், டவல் எடுத்துகிட்டு தியேட்டருக்குப் போயிருவாங்க. போலீஸ் எல்லாம் வந்தாலும் ஃபேன்ஸ் அடங்க மாட்டாங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் ஏறி ஒரு வழியா டிக்கெட் எடுத்துருவாங்க.

டிக்கெட் கிடைக்காம வீட்டுக்குப் போறவங்களும் உண்டு. ஜல்லிக்கட்டுல காளைய அடக்குற மாதிரி தீபாவளி ஃபர்ஸ்ட் ஷோல டிக்கெட் எடுக்குறது. டிக்கெட் எடுத்தாலே மாஸ்தான். படம் எப்படியிருந்தா இன்னா? டிக்கெட் கெடச்ச சேடிஸ்பேக் ஷன்ல திரும்பி வந்துருவாங்க.

இன்னொரு முக்கியமான பாயிண்ட் அப்போ சினிமான்னா ‘ஒரு கதை’ சொல்வாங்க. ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் இருப்பாங்க. அப்பா, அம்மா எல்லாம் இருப்பாங்க. நம்ம ஊர் மாதிரி ஒரு ஊர் இருக்கும். ஆளுங்க இருப்பாங்க. அப்புறம் ஒரு வில்லன் இருப்பான். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சண்டை வரும். கடைசில ஹீரோ ஜெயிப்பார். ஹீரோயின மேரேஜ் பண்ணுவார்.

இல்லனா வில்லன் அபேஸ் பண்ண ஹீரோவோட சொத்தை வில்லன ஜெயிச்சு வாங்கிருவார். போலீஸ் கடைசி சீன்ல வந்து, “யூ ஆர் அண்டர் அரஸ்ட்’’ அப்படி சொல்லி வில்லன கைது பண்ணிக் கூட்டிட்டுப் போவாங்க. இல்லன்னா ஹீரோவின் ப்ரெண்ட், துரோகம் பண்ணி செகண்ட் ஆஃப்ல எனிமியா மாறுவான். கடைசில ஹீரோ நண்பன ஜெயிச்சு அவர திருத்துவான்.

இது மாதிரி ஏகப்பட்ட ஸ்டோரீஸ். இன்னாதான் சொன்னாலும் அந்தக் காலத்துப் படத்துல ஒரு ஸ்ட்ரெயிட்டான கதை இருக்கும். மேட்டர் இன்னான்னா, குறியீட்டுப் படம், அம்பு போட்ட படம்லாம் அப்போ இல்ல. அதான் அந்தக் காலத்து பெருசுங்க இப்ப உள்ள எந்தப் படம் பார்த்தாலும், “அந்தக் காலத்து படம் மாதிரி இல்லபா” அப்படிம்பாங்க.

இப்ப ஸ்டோரி இல்லாத படம் எடுக்குறதுதான் டிரெண்ட். சோடா தெளிச்சி, தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிற மாதிரி. கதை இன்னான்னு தெரியாத மாதிரி எடுக்கணும். அதான் இப்ப சேலஞ்ச். அப்படியே ட்ரை பண்ணாலும் பார்க்க முடியாது. அது வேற மேட்டர். இன்னாபா ஒண்ணும் புரியல அப்படினு எவனாது கேட்டா ‘பின் நவீனத்துவப் படம்’ அப்படிங்கணும். ஃபுல் எனர்ஜியையும் போட்டுப் படம் பார்த்தாலும் புரியாது; புரியக் கூடாது.

இப்ப புதுசா இன்னொரு குரூப் கிளம்பியிருக்கு. படத்தைப் ப்ரேம் பை ப்ரேம் பிரிச்சு மேஞ்சு, ஹீரோவோட ஜீன்ஸ் கலர்ல இது இருக்கு. ஹீரோயினோட ஸ்டிக்கர் பொட்டுல அது இருக்குன்னு படத்தை எடுத்த டைரக்டருக்கே தெரியாத குறியீடெல்லாம் சொல்லுவாங்க. இன்னாபான்னு கேட்டா குறியீட்டுப் படம்பாங்க. இந்த மாதிரி படத்துக்கு இன்னயின்ன குறியீடு எல்லாம் இருக்குன்னு படம் பார்த்துட்டு வந்து பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்ருவாங்க. அத பாத்துட்டுப் படம் பார்க்கப் போறதால சேதாரம் இருக்காது.

No comments:

Post a Comment

T.N. govt. fixes issues with non-subdivision online patta transfers

T.N. govt. fixes issues with non-subdivision online patta transfers The Hindu Bureau CHENNAI. 04.07.2026 The Tamil Nadu government has simpl...