Wednesday, March 8, 2017

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ‘வை–பை’ வசதி ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு,
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்ட ஜோரி செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே ஆய்வு பணியில் ஈடுபட்டார். பின்னர் ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, இருப்புபாதை வசதியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த ‘வை–பை’ வசதியை தொடங்கிவைத்தார். பின்னர் 2 குடியிருப்பு பகுதிகளையும் திறந்துவைத்தார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:–
ராட்டிணக்கிணறு அருகே உள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணி தண்ணீர் வசதியில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணி துரிதமாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து அந்த தண்ணீரிலேயே ரெயில்களை கழுவுவதும் கழிப்பிடத்திற்கு பயன்படுத்துவது குறித்தும் பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்கும் பொருட்டு அருகில் உள்ள குளவாய் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து அந்த தண்ணீரை கொண்டு இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...