Wednesday, March 8, 2017



ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது.
புதுடெல்லி

ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் 3க்கு 2 பேர் டீ சாப்பிட வைத்துக்கொள் அல்லது  பிறவடிவங்களில் பொது சேவைகளை பெற லஞ்சம் கொடுப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.

இந்த் கணக்கெடுப்பை சர்வதேச வெளிப்படைத்தன்மை சர்வதேச  ஊழ எதிர்ப்பு குழுக்கள் நடத்தியது. இதில் 69 சதவீதம் பேர்  லஞ்சம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.தொடர்ந்து வியட்னால் 65 சதவீதம் பேரும், பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் குறைந்த அளவாக 26 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.ஜப்பானில்  மிக குறைந்த அளவாக 0.2 சதவீதத்தினர் மட்டுமே லஞ்சம்  வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.  தென் கொரியாவில்  3 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

கடந்த முறை 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்து 7 வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,ஜப்பான், மியான்மர், இலங்கை நாடுகளை விட அதிகரித்து விட்டது. 

ஆசிய பசிபிக் 16 நாடுகளில் 20 ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

பொது சேவைகளில் அதிக அளவு லஞ்சம் போலீஸ் துறையில் வாங்கபட்டதாக 36 சதவீதம் ஏழைகள் தெரிவித்து உள்ளனர்.அதிக அளவு பணம் லஞ்சம் வாங்குவது  வருவாய்துறையில் என தெரியவருகிறது.

போலீஸ் உள்பட பொது சேவை நிறுவனங்களுக்கு மக்கள் பணமாகவோ அல்லது பரிசு பொருளாகவோ அல்லது அவர்களுக்கு பிடித்த வகையிலோ கொடுத்து உள்ளனர்.

 நீதிபதிகள் அல்லது நீதிமன்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் ஆவணங்கள் பெறும் அலுவலகங்களில் இந்த லஞ்சம் கொடுக்கபட்டு உள்ளது. என ஆய்வில் கூறபட்டு உள்ளது

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...