Tuesday, November 7, 2017

படிப்புக்கு பணமின்றி தவிக்கும் மாணவி : நிதியுதவியை எதிர்பார்க்கும் எதிர்கால பல் டாக்டர்

மதுராந்தகம்: படிப்பை தொடர பணமின்றி தவிக்கும், பல் மருத்துவ மாணவி, கட்டணம் செலுத்தாததால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுராந்தகம், ஒன்பதாவது மண்டபத் தெருவில் வசிப்பவர், சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள்.
இளைய மகள், மதுராந்தகம் பகுதியில், கல்லுாரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்கிறார்.
மூத்த மகள் நந்தினி, பிளஸ் 2வில், 1,055 மதிப்பெண்கள் பெற்றவர். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவருக்கு, பண வசதி இல்லை.
இதனால், படாளம் அருகே உள்ள ஒரு கல்லுாரியில் பல் மருத்துவம் படிக்க சேர்ந்தார். அதற்கான கட்டணத்தை செலுத்த, அவரின் குடும்பம் யோசித்த போது, ஒரு நபர் அறிமுகமானார்.
மாணவியின் படிப்புக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம், நிதியுதவி ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார். அதை நம்பி, அந்த பெண், கல்லுாரியில் சேர்ந்து விட்டார்.
ஆனால், நாட்கள் பல ஆகியும் நிதியுதவி கிடைக்கவில்லை. மகளின் படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த மாணவியின் பெற்றோர், தங்கள் வீட்டை அடமானம் வைத்து, முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தினர்.
கல்விக் கடன் கேட்டு, பல வங்கிகளுக்கு விண்ணப்பித்தும், எந்த வங்கியும் உதவவில்லை. வட்டிக்குக் கடன் பெற்று, இரண்டாம் ஆண்டு படிப்பை, அவர் முடித்தார்.
தற்போது மூன்றாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த, அந்த ஏழை குடும்பம் படாதபாடு படுகிறது; யாரும் உதவவில்லை.
இதற்கிடையே, மூன்றாம் ஆண்டு தொடர, கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிந்ததால், அந்த மாணவியை, கல்லுாரி நிர்வாகம் வெளியேற்றி விட்டது.
கட்டணம் செலுத்தினால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், கண்ணீரோடு நிற்கிறார் அந்த ஏழை மாணவி. அவரின் கல்விக்கு உதவ நினைப்போர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், 9994581552 - சரவணன்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...