Thursday, January 4, 2018

நடுவானில் பெண் பைலட்டை தாக்கிய விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

Added : ஜன 04, 2018 07:08




மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானம் 324 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்பட்டு புத்தாண்டு தினத்தன்று (ஜன. 1-ம் தேதி) மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பைலட்டுகள் அமரும் காக்பிட்டில் இரு பைலட்டுகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் ஆண் பைலட் பெண் பைலட்டை கன்னத்தில் அறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. கண்ணீருடன் காக்பிட்டை விட்டு வெளியே வந்த அந்த பெண் பைலட் சக பைலட்டுகளிடம் கூறியுள்ளார்.


இந்த விவகாரம் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல்(டி.ஜி.சி.ஏ.) கவனத்திற்கு சென்றது. விமான பாதுகாப்புவிதிமுறைகளை மீறி இரு பைலட்டுகளும் நடுவானில் சண்டையிட்டதால் அவர்களின் லைசென்ஸ்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024