Wednesday, May 23, 2018

நிபா' தாக்கி இறந்த நர்ஸ் : கணவருக்கு உருக்கமான கடிதம்

Added : மே 23, 2018 00:59




திருவனந்தபுரம்: கேரளாவில், 'நிபா' வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நர்ஸ், லினி, தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை, கேரள அரசு வெளியிட்டுள்ளது.கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், மார்க்., கம்யூ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்கி, 11 பேர் உயிரிழந்தனர்; இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.நிபா வைரஸ், வீட்டு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. குறிப்பாக, பழந்தின்னி வவ்வால்களின் எச்சம், சிறுநீர் மற்றும் மலத்தில் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பெரம்பரா என்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை, நிபா வைரஸ் தாக்கியது. அவர்களுக்கு, பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி, மூவரும் உயிரிழந்தனர்.இவர்களுக்கு சிகிச்சையில் உதவிய, நர்ஸ், லினி புத்துசேரி, 31, நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, லினியின் உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், மாவட்ட நிர்வாகமே உடனடியாக எரியூட்டியது.இந்நிலையில், லினி இறக்கும் தருவாயில், வெளிநாட்டில் பணியாற்றும், தன் கணவர் ஷாஜிக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை, கேரள அரசு வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:நான் உங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து கொண்டிருக்கிறேன். உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று தோன்றவில்லை; என்னை மன்னித்து விடுங்கள். நம் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் உங்களுடன் அரபு நாட்டுக்கு அழைத்து சென்று விடுங்கள். நம் தந்தையை போல, அவர்களும் இங்கே தனியாக இருக்கக் கூடாது.நிறைய அன்புடனும், காதலுடனும் - லினி.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த கடிதத்தை, கேரள சுற்றுலா துறை அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். லினியின் மரணத்துக்கு, கேரள முதல்வர், பினராயி விஜயன், தன், 'பேஸ்புக்' பக்கத்தில் இரங்கல்

தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...