Friday, May 25, 2018

முதுகலை மருத்துவ கவுன்சிலிங் நிராகரிப்பை எதிர்த்து வழக்கு

Added : மே 25, 2018 05:25

மதுரை : முதுகலை மருத்துவப் படிப்பில் மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் நிராகரித்ததைஎதிர்த்து தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

திருச்சி பிரியா ஆர்த்தி தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை மருத்துவ மேற்படிப்பு 'நீட்' தேர்வில் 653 மதிப்பெண் பெற்றேன். அகில இந்தியஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்மார்ச்சில் நடந்ததில் பங்கேற்றேன். ராஜஸ்தான் மருத்துவக்கல்லுாரியில் எம்.டி.,படிப்பில்சேர்ந்தேன். அகில இந்திய ஒதுக்கீடுகவுன்சிலிங் முடிந்ததும், மாநில கவுன்சிலிங்கை மார்ச் 25 நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. மே 20 மாநிலகவுன்சிலிங்கில் அசல் கல்விச் சான்றை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, மருத்துவக் கல்விஇயக்குனரக தேர்வுக்குழு செயலர்நிராகரித்தார்.

விதிகள்படி அசல் சான்றுகள் அவசியமில்லை.என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்னைநிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில்அரசு மருத்துவக் கல்லுாரியில்இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். புதுக்கோட்டை நந்தினிதேவியும் மனு செய்தார்.நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஜூன் 12 க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024