Tuesday, July 17, 2018

'7 கேள்விக்கு பதில் தர 2.53 லட்சம் ரூபாய் தா'

Added : ஜூலை 17, 2018 00:41

சத்தியமங்கலம் : தகவல் உரிமை சட்டத்தில், ஏழு கேள்விகளுக்கு பதில் தர, 2.53 லட்சம் ரூபாய் கேட்டதால், கேள்வி கேட்டவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஈரோடு மாவட்டம், இருட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், 30; விவசாயி, இவர், 2015ல் இருட்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், சில தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார். 30 நாட்களுக்குள் பதில் வராததால், மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அழகிரி, 'எட்டு கேள்விகளில், ஏழு கேள்விகளுக்கு தகவல் வேண்டும் என்றால், இரண்டு லட்சத்து, 53 ஆயிரத்து, 100 ரூபாய் செலவாகும். 'டிடி'யாக அனுப்பினால், மேற்குறித்த புள்ளி விபரங்கள் கொடுக்கப்படும்' என, பதில் அளித்துள்ளார்.

இதனால், காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது: தகவல் சட்டத்தில் தகவல் தர, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. நான் கேட்ட தகவல், ஒரு லட்சத்து, 26 ஆயிரம் பக்கங்கள் வராது. அப்படியே வருவதென்றால், எத்தனை பக்கம் என தெளிவாக கூற வேண்டும். அதை விடுத்து, பணம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தை கேலிக்குரியதாக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024