Tuesday, July 17, 2018


விபத்தில் பெண் நிருபர் பலி; ரூ.3 லட்சம் நிவாரணம்

Added : ஜூலை 17, 2018 01:33




சென்னை : சாலை விபத்தில் இறந்த, பெண் நிருபரின் குடும்பத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர், பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

மாலை முரசு, 'டிவி'யில் நிருபராக பணிபுரிந்தவர் ஷாலினி, 23. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து, சென்னைக்கு காரில் சென்றார். பொட்டி குளம் அருகே சென்றபோது, கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஷாலினி அதே இடத்தில் இறந்தார்.

இதையறிந்த முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், சிறப்பு நிகழ்வாக, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், இரங்கல் தெரிவித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்கினார். துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024