Friday, July 13, 2018

மீன்வள பல்கலையில் முறைகேடு விசாரணை நடத்த கமிட்டி அமைப்பு

Added : ஜூலை 13, 2018 03:17

மீன் வள பல்கலையில், 'நபார்ட்' நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை விசாரிக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வள பல்கலையில், 2017ல், துணைவேந்தர் பதவி காலியாக இருந்தபோது, பல்கலையின் பேராசிரியர், ரத்னகுமார், பதிவாளராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் செயல்பட்டார். அப்போது, மத்திய அரசின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி, 'நபார்டு' வழியாக பெறப்பட்ட நிதியை, நிபந்தனைகளை மீறி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, பல்கலை நிர்வாகம் நடத்திய விசாரணையில், பல்கலை நிதிக்குழுவின் ஒப்புதல் பெறாமல், நபார்டு நிதி, வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து, பதிவாளர் ரத்னகுமார், 2018, மே மாதம், 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டார்.இந்நிலையில், ரத்னகுமார் மீதான குற்றச்சாட்டில், அவரது விதிமீறல்கள் என்ன; நபார்டு நிதி பயன்படுத்தப்பட்டதில் உண்மை என்ன என்பதை விசாரிக்க, ஐந்து பேர் அடங்கிய கமிட்டியை, மீன்வள பல்கலை அமைத்துள்ளது.இந்த கமிட்டி, இரண்டு வாரங்களில் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024