Friday, July 13, 2018

ரயில் டிக்கெட் முன்பதிவு பகுதி நேரம் நிறுத்தம்

Added : ஜூலை 13, 2018

தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், நாளை பிற்பகல், 2:15 மணி முதல் மாலை, 3:15 மணி வரை, முன்பதிவு நிறுத்தப்படுகிறது. அதேபோல், நாளை இரவு, 11:45 மணி முதல், 15ம் தேதி அதிகாலை, 1:20 மணி வரை, முன்பதிவு நிறுத்தப்படுகிறது.'இந்த நேரங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்திலும், டிக்கெட் முன்பதிவை ரத்து செய்ய முடியாது.

'மேலும், '139' என்ற, விசாரணை மையத்தையும் தொடர்பு கொள்ள முடியாது' என, அறிவிக்கப் பட்டுள்ளது.இதன்படி, தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே மற்றும் தென்மத்திய ரயில்வேயில் இருந்து புறப்படும் ரயில்களுக்கும் முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது. முன்பதிவு மையங்கள் பராமரிப்பு பணி காரணமாக, முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரம், வேறு ரயில்வே மண்டலங்களில் இருந்து, இந்த ரயில்வே மண்டலத்திற்கு வரும் ரயில்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024