Friday, July 13, 2018


பிசியோதெரபிஸ்ட் கொடூர கொலை கூலிப்படை அமர்த்தி, 'போட்டு தள்ளிய' இளம்பெண்

Added : ஜூலை 13, 2018 04:12

திருச்சி:திருச்சி, காவிரி ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், சென்னையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றியவர் என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது.
திருச்சி, திருவானைக்காவல் திருவளர்ச்சோலை அருகே, காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் காலை, வெட்டு காயங்களுடன், அழுகிய நிலையில், ஆண் சடலம் மிதந்தது.ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். 35 வயது மதிக்கத்தக்க அவர், கொலை செய்யப்பட்டு, நான்கைந்து நாட்கள் இருக்கும் என தெரிந்தது.

தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், அரியலுார், பொன்பரப்பியைச் சேர்ந்த விஜயகுமார், 36, என்பதும், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, பி.ஆர்.எஸ்., மருத்துவமனையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றியவர் என்பதும் தெரிந்தது.
இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் கூறியதாவது:விஜயகுமாருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். சென்னையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றினார்.இவர், அரியலுாரில் இருந்து, சென்னைக்கு ரயிலில் செல்லும் போது, திருச்சி, உறையூரிலிருந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஐ.பி.ஏ.ஐ., மையத்தில், சி.ஏ., படிக்க சென்ற ஈஸ்வரி, 21, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும், அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதை, விஜயகுமார் வீடியோ எடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஈஸ்வரியை அடிக்கடி மிரட்டியுள்ளார். விஜயகுமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதன்படி, விஜயகுமாரை திருச்சிக்கு வரவழைத்தார். தனக்கு தெரிந்த, திருச்சி கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் மூலம், காவிரி ஆற்றுக்கு விஜயகுமாரை அழைத்து சென்று, கொலை செய்துள்ளார்.சம்பவத்தின் போது, ஈஸ்வரியும் உடன் இருந்துள்ளார். நால்வரையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024