Friday, July 13, 2018

வீடு தேடி வரும் கங்கா தீர்த்தம் 'மொபைல் ஆப்' துவக்கம்

Added : ஜூலை 13, 2018 04:05

புதுடில்லி:காசிக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே, கங்கா தீர்த்தம் பெறுவதற்கான, 'மொபைல் ஆப்'பை, மத்திய கலாசார துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா, நேற்று துவங்கி வைத்தார்.

தலைநகர் டில்லியில் உள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனமான, 'இந்திரபிரஸ்த சஞ்சீவனி' அறக்கட்டளை சார்பில், கங்கா தீர்த்தம் பெறுவதற்கான, 'மொபைல் அப்ளிகேஷன்' வடிவமைக்கப்பட்டது.
இது குறித்து, அந்த அறக்கட்டளை தலைவர், சஞ்சீவ் அரோரா கூறியதாவது:மூன்று ஆண்டுகளாக, டில்லியில் ஆறு லட்சம் பேருக்கு, கங்கா தீர்த்தம் இலவசமாக வழங்கியுள்ளோம்.தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள, மொபைல் ஆப்பில், 'கிளிக்' செய்தால், கங்கா தீர்த்தம், வீடு தேடி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மொபைல் ஆப்பை, துவக்கி வைத்த, மத்திய கலாசார துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மகேஷ் சர்மா கூறுகையில், ''கங்கையை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய கடமை, நம் அனைவருக்கும் உள்ளது. ''நாட்டு மக்களில், 40 கோடி பேரின் தாகத்தை, கங்கை தணிக்கிறது என்பதை, நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024