Saturday, July 14, 2018

'பல்கலை கல்வி கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்கும்'

Added : ஜூலை 14, 2018 03:06

புதுடில்லி:'அண்ணாமலை பல்கலையில், கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தின் அண்ணாமலை பல்கலையில், 2013 - 14 கல்வியாண்டில், முதல் முறையாக துவக்கப்பட்ட, எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர்ந்த, 150 மாணவர்கள், ஆண்டுக்கு, 5.54 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டுமென, பல்கலை கூறியது.இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. 'கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, பல்கலைக்கே அதிகாரம் உள்ளது' என, உயர் நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அருண் மிஸ்ரா, உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.விசாரணை முடிவில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 'அண்ணாமலை பல்கலை கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கே உள்ளது.

'கடந்த, 2018 - 19 கல்வியாண்டு முதல், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, குழு அமைக்கப்பட வேண்டும்' என, கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024