Saturday, July 14, 2018

'கொடை' யில் வீசும் காற்றால் சுற்றுலா பயணிகள் அவதி

Added : ஜூலை 14, 2018 05:34


கொடைக்கானல்:கொடைக்கானலில் வீசும் பலத்த காற்றால் மரங்கள் சாய்ந்தன. சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோடை வாச தலமான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மாறுபட்ட சீதோஷ்ண நிலை, சாரல் மழை,பலத்த காற்றுஎன்ற சூழல் நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் இங்கும் குளிர்காற்று வீசுகிறது.

மலைப்பகுதியில் சாரல் மழையுடன் வீசும் பலத்த காற்றுக்கு சிவனடி ரோடு, செட்டியார் பூங்கா பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மரங்கள் விழுவதால்ஆங்காங்கேவாகனங்கள்செல்லமுடியாமல் போக்குவரத்து , மின்சாரம் தடைகள் ஏற்படுகின்றன.

நேற்று முன்தினம்பிரையன்ட்பூங்கா பகுதியில் மரங்கள் சாய்ந்து நகராட்சி கடைகள் மீது விழுந்ததில் கடைகளில் இருந்த பொருட்கள் சேதமானது. தீயணைப்பு துறையினர் மரங்களைஅப்புறப்படுத்தினர்.

சுற்றுலா தலங்களான பிரையன்ட் பூங்கா , ஏரி ரோடு, கலையரங்க கட்டண வாகன நிறுத்துமிடங்களில ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024