Saturday, November 1, 2014

மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், இன்று முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.



புதுடில்லி : கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்.,மில், மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே இனி, இலவசமாக பணம் எடுக்க முடியும். மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், இன்று முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தியா முழுவதும், 1.6 லட்சம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. தற்போது, பெரும்பாலான மக்கள், ஏ.டி.எம்.,கள் மூலமாகத் தான் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம்., பராமரிப்பு பணிகள் அதிகரித்துள்ளதால், அவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தும்படி, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி, சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இதுவரை, வாடிக்கையாளர்களின் கணக்கு உள்ள வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு ஐந்து முறை மட்டுமே, கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இன்று முதல், ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதேபோல், கணக்கு இல்லாத பிற வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில், இதுவரை, ஐந்து முறை கட்டணமின்றி இலவசமாக பணம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. இன்று முதல், மூன்று முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். மூன்று முறைக்கு மேல், பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த நேரிடும்.டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...