Saturday, November 4, 2017


போக்குவரத்து நெரிசல் : விமானங்கள் தாமதம்



சென்னை: சென்னையில் நேற்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல், கனமழை பெய்தது. அதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விமான பைலட்டுகள், பணிப்பெண்கள் மற்றும் பயணியர், குறிப்பிட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வந்தடைய முடியவில்லை. இதனால், சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் உள்ளிட்ட, 18 வெளிநாட்டு விமானங்கள். டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும், 24 உள்நாட்டு விமானங்கள் என, 42 விமான சேவைகள், அரை மணி நேரம் முதல், ஒரு மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

No comments:

Post a Comment

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court Upasana Sajeev 29 Apr 2024 1:30 PM...