Monday, November 6, 2017


மாணவர்களுக்கு தண்டனை : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

திருச்சி: திருச்சியில், தீபாவளி கொண்டாடிய பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, கீழப்புதுாரில் சர்வைட் என்ற மெட்ரிக் பள்ளி உள்ளது. 10ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். அக்., 18ல் தீபாவளி முடிந்து, பள்ளி திறந்த அடுத்த நாள், தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவர்களையும், மருதாணி வைத்திருந்த மாணவியரையும் தனியே அழைத்து, பட்டாசு வெடித்ததற்கு, தலை குனிந்து, இயேசுவிடம் மன்னிப்பு கேட்க, ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் மருதாணி வைத்திருந்த மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரூ போஸ், பிரம்பால் கையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஹிந்து அமைப்புகள், கல்வி அதிகாரிகளிடமும், போலீசிலும் புகார் அளித்தனர். குழந்தைகள் நல வாரியம் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை லில்லி, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரூ போஸ் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விமலா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...