Saturday, November 4, 2017


திண்டுக்கல்லில் வெங்காயம் கிலோ ரூ.150


திண்டுக்கல்: வறட்சி, மழை பாதிப்பால் சின்ன வெங்காயம் கிலோ விலை ரூ.150 ஐ எட்டியது. 'இலங்கைக்கு ஏற்றுமதியாவதால் விலை குறைய வாய்ப்பு இல்லை' என, வியாபாரிகள் 
தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் சாகுபடி குறைந்து சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு விற்றது. நேற்று திண்டுக்கல் மார்க்கெட்டில் கிலோ ரூ.150 ஆக விலை உயர்ந்தது.திண்டுக்கல்லில் வாரம் மூன்று நாட்கள் நடக்கும் வெங்காய மார்கெட்டிற்கு வழக்கமாக 50 கிலோ எடையில் வெங்காயம் 2 ஆயிரம் மூடைகள் வரும். தற்போது 500 மூடைகள் மட்டுமே வரத்து உள்ளது. இதனால் கிலோ ரூ. 150 ஆக உயர்ந்தது. 
மேலும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாவதால் மேலும் விலை உயர வாய்ப்பு 
உள்ளது.

கமிஷன் கடை வியாபாரி சங்கர் கூறுகையில், ''இந்த விலை உயர்வு ஒரு மாதத்திற்கு நீடிக்கும். வரத்து குறைவால் வெங்காய மார்க்கெட் களை இழந்துள்ளது. தற்போது வெங்காய நடவு ஆகிறது. மூன்றுமாதங்களுக்கு பின் விலை குறையும்''
என்றார்.

ரோட்டோரம் வீச்சு

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வடமதுரை, செம்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார் உட்பட பல இடங்களில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுவதால், வெங்காயத்தை சிலர் கிணற்று பாசனம் மூலம் பயிரிட்டுள்ளனர். இவ்வாறு வெங்காயம் அறுவடை நேரத்தில் பெய்யும் மழையால் அழுகியுள்ளன.
இதனால் விவசாயிகள்அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். பூதிப்புரம் விவசாயி மகாலட்சுமி கூறியதாவது: ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 முதல் ரூ.150ரை விற்கப்படுகிறது. அறுவடை நேரத்தில் மழையால் அழுகி விட்டது, என்றார்.

No comments:

Post a Comment

news today 23.10.1024