Saturday, November 4, 2017


மூன்றாவது முறையாக 'வாட்ஸ் ஆப் அவுட்!'


தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், 'வாட்ஸ் ஆப்' செயலி நேற்று திடீரென, செயலிழந்தது. நேற்று மதியம், 1:00 மணி முதல், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், 'வாட்ஸ் ஆப்' செயலி, ஒரு மணி நேரம் திடீரென செயலிழந்தது. தகவல்களை அனுப்ப முடியாமலும், பார்க்க முடியாமலும், பல ரும் அவதிப்பட்டனர். அந்த வருத்தத்தை, 'பேஸ்புக்' பக்கத்தில், ஒருவர் பின் ஒருவராக பகிர துவங்கியதே, இப்பிரச்னைக்கு காரணம் என, தெரிய வந்தது. பாகிஸ்தான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும், வாட்ஸ் ஆப் செயல்படவில்லை. ஒருவழியாக, பிற்பகல், 2:00 மணிக்கு பின் செயல்பட துவங்கியதும், 'வாட்ஸ் ஆப்' ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த ஆண்டு, மே மற்றும் ஆக., மாதங்களிலும், இது போல், வாட்ஸ் ஆப், திடீரென செயலிழந்தது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...