Saturday, November 4, 2017


ஆர்.ஐ.,க்கு அறை : வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'


புவனகிரி: வருவாய் ஆய்வாளரை தாக்கிய, வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் சங்கர், பரங்கிப்பேட்டை வருவாய் கோட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்களை, கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டிருந்தார். சேந்திரக்கிள்ளை, வி.ஏ.ஓ., அலெக்சாண்டர், ஆக்கிரமிப்பு விபரங்களை தரவில்லை. இது தொடர்பாக கேட்டபோது, ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், சங்கரின் கன்னத்தில் அறைந்தார். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, அலெக்சாண்டரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், அலெக்சாண்டரை, 'சஸ்பெண்ட்' செய்து, சிதம்பரம், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், நேற்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

news today 23.10.1024