Sunday, April 16, 2017



ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மரணம்! #alert



கோழிக்கோடு அருகே கொயிலாண்டியைச் சேர்ந்த பஷீர் என்பவரது 4 வயது மகன் யூசப் அலி. கடந்த வெள்ளிக்கிழமை யூசப் அலி, தாயார் சுகரபி பேக்கரி ஒன்றில் ஜெல்லி மிட்டாய் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சில மணி நேரங்களில், இருவரும் வாந்தி எடுத்து மயங்கியிருக்கின்றனர். கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பஷீர்பரிதாபமாக இறந்து போனான். சுகரபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையைச் சேர்ந்த National Confectionary -தயாரிப்பான Tiger Hycount Jelly மிட்டாயை சிறுவனும் தாயும் சாப்பிட்டுள்ளனர். போலீசார் அந்த பேக்கரியில் இருந்து ஜெல்லி மிட்டாய்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.07.2026