Saturday, November 4, 2017


செல்லாத நோட்டு, 'டிபாசிட்' விவகாரம் : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்


புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அனுமதி கோரும், 14 வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன சட்ட அமர்வுக்கு, உச்ச நீதிமன்றம் மாற்றி உள்ளது.
புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016 நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய முடியாத, 14 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரித்தது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு, ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. 
அந்த வழக்குகளுடன், 'டிபாசிட்' செய்ய அனுமதி கோரும் வழக்குகளையும் விசாரிக்கும் வகையில், இந்த, 14 வழக்குகளும், ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதாக, மூன்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...