Saturday, November 4, 2017


'பார்சல்' பொருட்கள் சேதம் :இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை;பார்சலில் அனுப்பிய, வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்ததால், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.சென்னையில், தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிய காஞ்சனா என்பவர், கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையிலிருந்து வீட்டு உபயோக பொருட்களை கொண்டு வருவதற்கு, குளத்துாரிலுள்ள 'பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்' என்ற தனியார் நிறுவனத்தில், 2013, மே., 30ல் புக்கிங் செய்தார்.
இதற்காக, ரூ.13 ஆயிரத்து 500 கட்டணம் கொடுத்தார். பார்சலில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. உடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கேட்டபோது கொடுக்க மறுத்தனர். கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில், காஞ்சனா வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிமன்ற தலைவர் செங்கோட்டையன், சேதமடைந்த பொருட்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவிற்கு மூவாயிரம் ரூபாயும் வழங்க பார்சல் புக்கிங் நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...