Saturday, November 4, 2017


எம்.பி.பி.எஸ்.,க்கு தேர்வானவர்களின் விபரங்கள் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மருத்துவ படிப்புக்கு, தேர்வானவர்களின் விபரங்களை தாக்கல் செய்யும்படி, தேர்வுக்குழு செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, நீரஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:திருச்சியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கான தகுதி பட்டியலில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இடம் பெற்றனர். அண்டை மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தை சொந்த ஊராக காட்டி, அதற்கான சான்றிதழ் அடிப்படையில், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.முறையாக தேர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்த தவறு நடந்திருக்காது. அதிகாரிகளின் அலட்சியத்தால், சென்னையில், எனக்கு இடம் கிடைக்கவில்லை. சென்னையில் மட்டும், அண்டை மாநிலங்களை சேர்ந்த, ௧௦௦க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு, என்னை மாற்றும்படி கேட்டும், எந்த பதிலும் இல்லை. எனவே, சென்னையில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு, மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

சென்னை மருத்துவ கல்லுாரியில், அண்டை மாநிலங்களை சேர்ந்த, ௧௦௪ மாணவர்களும், தமிழகத்தை சேர்ந்த மற்ற கல்லுாரிகளில், ௪௪௦ மாணவர்களும் சேர்ந்திருப்பதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். சொந்த ஊருக்கான சான்றிதழை, தாசில்தார் வழங்கியிருப்பதால், வருவாய் துறை செயலரை, வழக்கில் சேர்க்கிறேன்.

மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கோப்பு மற்றும் ஆவணங்களை, தேர்வுக் குழு செயலர், தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

news today 23.10.1024