Saturday, November 4, 2017


குரூப் - 1 தேர்வு பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு


சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 1 தேர்வில், தேர்வானவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கையான சுவப்னா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், '2015ல், 68 பணிகளுக்கான, குரூப் -1 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வுக்கான விடைத்தாள் ெவளியானதால், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இதுகுறித்து விசாரணை நடத்த, போலீசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'தேர்வாணையம் தரப்பில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும், தனியார், 'டிவி'யில் ெவளியான விடைத்தாளும், தேர்வாணையம் அளித்த விடைத்தாளும், ஒரே மாதிரியாக உள்ளதாகவும், ஒரே இயந்திரத்தில் அச்சிடப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குரூப் -1 தேர்வில், தேர்வானவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

news today 23.10.1024